தனிமனிதர்களின் புத்தாண்டு சபதங்கள் பெரும்பாலும் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துபோய் விடுகின்றன.
ஆண்டொன்று கூடினால் வயதொன்று அதிகரிக்கும் என்பதோடு நின்று விடாமல் 2020 இல் இவையெல்லாம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
*பணம் பெறாமல் மக்கள் ஓட்டுப்போட ஆரம்பித்தால்,
*குண்டும் குழியுமான சாலைகள் காணாமல் போய்விட்டால்,
*மொட்டைமாடி தண்ணீர் தொட்டிகள் அடிக்கடி கழுவப்பட்டால்,
*போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் போய்விட்டால்,
*மாதமொரு ஜி.பி இணையதள வசதி மட்டுமே கிடைத்தால்,
*பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோசூட் நடத்துவதை நிறுத்திவிட்டால்,
*சிக்னல்களை மக்கள் மதிக்க ஆரம்பித்தால்,
*போராடுவதற்கு காரணங்கள் காணாமல் போய்விட்டால்,
*ஆறுமாத சிவப்பழகு விளம்பரங்கள் ஆயுள் குறைந்து விட்டால்,
*அபத்த சினிமா சண்டைக் காட்சிகள் அமைதியாகிவிட்டால்,
* டிவிட்டர் ட்ரெண்டிங்குகள் தூர்த்துப் போய்விட்டால்,
*வாட்சப் போராளிகள் வழக்கொழிந்து போய்விட்டால்,
*பாகிஸ்தான் பஞ்சாயத்துகள் பறந்து போய்விட்டால்,
*மதப்பிரச்சனைகள் கதம் ஆகிவிட்டால்,
*செல்போன் இல்லாமல் குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தால்,
*நாடகக் கதைகள் நாடுகடத்தப்பட்டால்,
*மதிப்பெண் முறைகள் மதிப்பிழந்து போய்விட்டால்,
*பேஸ்புக்கில் லைக் பட்டன் டிசேபிள் ஆகிவிட்டால்,
*காப்பி பேஸ்ட்டுகள் வேஸ்ட் ஆகிவிட்டால்,
*பஞ்ச் டயலாக்குகள் பஞ்சராகிப் போனால்,
*வாக்குறுதி அளிப்போர்க்கு வாய்ப்பூட்டு போடப்பட்டால்,
*கையூட்டு பெறுவோரெல்லாம் கையும் களவுமாய் பிடிபட்டால்,
*புரியாத மேடைப் பேச்சுகள் புரையோடிப் போய்விட்டால்,
*காமுகோர்க்கெல்லாம் கணநேரத்தில் தண்டனை கிடைத்தால்,
*சிரிப்பற்ற மீம்ஸ்கள் சிறைபட்டுப் போய்விட்டால்,
*இணையப் போராளிகள் தெளிவாய் பேசினால்,
*விவாத மேடைகள் விநோதமாய் மாறிவிட்டால்,
*விருதுகள் வாங்கப்படாமல் கொடுக்கப்பட்டால்,
*மலையளவு விலைவாசி மடுவளவு மாறிவிட்டால்,
*காசே இல்லாமல் கடவுள் காட்சி தந்தால்
2020 எத்தனை நன்றாக இருக்கும்!
No comments:
Post a Comment