Dec 31, 2019

2019 இன் நினைவுகள் 50









2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகளில் எம் நினைவில் இடறும் சிறந்த 50 செயல்பாடுகளின் பட்டியல் :


1)CODISSIA வில் நடைபெற்ற Coimbatore Science and Technology Festival இல் எமது மாணவர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு தமது படைப்பை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்-6/1/19

2)Telescope மூலம் வானத்தை உற்று நோக்கும் Skywatch Program OSF சார்பில் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.திரளான பார்வையாளர்கள் வானத்தை உற்றுநோக்கி வானியலைக் கற்றனர் -12/1/19

3)பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு பதில் சில்வர் வாட்டர் பாட்டிலை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கினர் -21/1/19

4)திருப்பூர் புத்தகத் திருவிழாவில் எமது மாணவியர் இருவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன-5/2/19

5)VVM Observer ஆக பணியாற்றியமைக்காக VIBHA சார்பில் சான்று வழங்கப்பட்டது - 5/2/19

6)சிறுகச் சிறுக சேமித்த எமது மாணவர்கள் திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு,சுமார் 5000/ ரூபாய்க்கு புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினர்-6/2/19

7)ஆனந்த விகடனில் "முன்மாதிரி அரசுப் பள்ளி" எனும் சிறப்புக் கட்டுரை வெளியானது -23/2/19

8)மண்டல அறிவியல் மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்விற்கு எமது மாணவர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டு வானியலை நேரடியாகக் கற்றனர்-28/2/19

9)எமது மாணவியின் Coin Vending Machine கூகுள் நிறுவனத்தால் சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது-29/2/19

10)Plickers எனும் Online மதிப்பிடும் முறையில் மாணவர்கள் மதிப்பிடப்பட்டனர் -2/3/19

11)மாவட்ட அளவிலான துளிர் Tallent Test இல் எமது மாணவர் முதலிடம் பெற்றார் -11/3/19

12)"பூங்காற்று" எனும் பெயரில் எமது மாணவர்களே மாத இதழ் வெளியிட ஆரம்பித்தனர்-12/3/19

13)FSSAI எனும் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறையின் Health and Wellness Co-ordinator அங்கீகாரம் கிடைத்தது-18/3/19

14)வாக்களிக்கப் பணம் பெறக்கூடாது எனும்  எமது மாணவர்களின் "வாக்கு விற்பனைக்கு அல்ல" செயல் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கியது-23/3/19

15)ஒரு கல்லில் இரு மாங்காயாக ஒரே நாளில் எமது மாணவர் மூவர் "பசுமைப் பாதுகாவலர் விருதும்" ஐவர் "இளம் விஞ்ஞானி"விருதும் பெற்றனர் -28/3/19

16)PSLV C-45 இராக்கெட் ஏவுதலை மாணவர்கள் நேரடி ஒளிபரப்பாக முதன் முதலில் கண்டு வியந்தனர் -1/4/19

17)கோடைகாலத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க மொட்டை மாடிகளில் நீரும் தானியங்களும் வைக்கும் செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது -9/4/19

18)NMMS தேர்வில் எமது மாணவர் இருவர் வெற்றி பெற்று தொடர் கல்வி உதவித் தொகைக்குத் தகுதி பெற்றனர் -20/4/19

19)Azim Premji Foundation அமைப்பிடம்
"Creating a thirst for reading among the students..." எனும் செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்புடைமை பெற்றது -8/5/19

20)கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு "நம்பிக்கை 2019" விருது வழங்கி கெளரவித்தது-12/5/19

21)Tamilnadu Digital Team அமைப்பு"ஒளிரும் ஆசிரியர் விருது" வழங்கி கெளரவித்தது-5/7/19

22)தினமலர் நாளிதழில் "திருப்பூரில் குட்டி இஸ்ரோ'' என்ற பள்ளி குறித்த சிறப்புக்கட்டுரை வெளியானது -7/7/19

23)இந்து நாளிதழில் "அறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் மாநகராட்சிப் பள்ளி" எனும் சிறப்புக்கட்டுரை வெளியிடப்பட்டது -9/7/19


24)சிந்தனைத் திறனறிதல் போட்டியில் வென்ற 4 மாணவர்கள் சந்திரயான் 2 ஏவுதலை நேரடியாகக் காண இஸ்ரோ அழைத்துச் செல்லப்பட்டனர்-15/7/19

25)சந்திரயான் 2 ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டதால் மீண்டும் மாணவர்கள் நால்வர் இஸ்ரோ அழைத்துச் செல்லப்பட்டனர் -22/7/19

26)அறிவுச் சுரங்கமான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் - 23/7/19

27)தேசியக் கொடியினுள் தாவர விதைகள் வைக்கப்பட்டு "முளைக்கும் தேசியம்" செயல் திட்டம் தொடங்கப்பட்டது -15/8/19

28)Space Quiz இல் வெற்றி பெற்றமைக்காக Mygov & ISRO சான்றிதழ்கள் வழங்கப்பட்டன -18/8/19

29)மாணவர் நேர்மையை ஊக்குவிக்கும் வகையில் "நேர்மைக்கடை" திறக்கப்பட்டது - 27/8/19

30)"புதிய தலைமுறை ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது -31/8/19

31)OSF-INTERNATIONAL ASTRONOMICAL UNION(IAU)-அமைப்பின் Under One Moon-செயல்திட்டத்தில் எமது மாணவர் 30 பேரின் படைப்புகள் IAU இணையதளத்தில் வெளியிடப்பட்டன -15/9/19

32)OMR Sheet மூலம் எமது மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர் -18/9/19

33)Virtual Reality Show (VR) மற்றும் Augmented Reality Show (AR)ஆகியன ஆரம்பிக்கப்பட்டன - 20/9/19

34)KPR கல்லூரியில் நடைபெற்ற Annular Solar Eclipse நிகழ்வில் எமது மாணவர் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர் - 28/9/19

35)தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் எமது மாணவன் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார் - 4/10/19

36)Sri Aurobindo Society and HDFC Parivartan's ZIIE இன் Teacher Innovative Award கிடைத்தது - 5/10/19

37)OSF இன் Fellowship க்காக மாணவர்களுடன் கலந்துரையாட டெல்லியில் இருந்து  ChangeLooms அமைப்பினர் பள்ளிக்கு வருகை புரிந்தனர் -7/10/19

38)STEM Project இல் வெற்றி பெற்றதற்காக OSF அமைப்பின் முதலாவது Open Science Centre பள்ளியில் தொடங்கப்பட்டது - 19/10/19

39)Screen Magnification தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் படக்காட்சிகளைக் காண ஆரம்பித்தனர்-22/10/19

40)இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டதற்காக Central Vigilance Commission சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது -31/10/19

41)தொடுதிரை கல்வி முறையின் சாதகபாதகங்கள் குறித்த பள்ளியின் பார்வை கட்டுரை தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது3/11/19

42)OSF இன் OSC க்காக தொலைநோக்கி பள்ளிக்கு பரிசாகக் கிடைத்தது7/11/19

43)ISRO தலைவர் திரு.சிவன் அவர்கள் எமது 4 மாணவர்களுக்கு கடிதம் அனுப்பினார் -10/11/19

44)Telescope தொழில்நுட்பம்,பொருத்தும் மற்றும் கையாளும் முறைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது -23/11/19

45)OSC செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்கு  Activity Log Book வழங்கப்பட்டது - 23/11/19

46)மத்திய அரசு நிறுவனங்களான Vijnan Bharati,Vijian Prasar மற்றும் NCERT இணைந்து நடத்திய VVM-Online தேர்வை எமது மாணவர்கள் எழுதினர் - 24/11/19

47)PSLV C47 Launch காண 5 மாணவர்கள் ISRO அழைத்துச் செல்லப்பட்டனர் -27/11/19

48)தினமலர் சார்பில் "லட்சிய ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது -20/12/19

49)Solar Filters மூலமாக எமது மாணவர்கள் நேரடியாக சூரியனை உற்றுநோக்கினர் -26/12/19

50)பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையதள செய்திகளில் பள்ளியின் சிறந்த செயல்பாடுகள் குறித்த கட்டுரைகள் ஆண்டு முழுதும் தொடர்ந்து வெளிவந்தன.

மொத்தத்தில் இந்த 2019 ஆம் ஆண்டு மிகச் சிறந்த,புதுமைகள் நிறைந்த,மாணவர்களின் சுய சிந்தனைக்கு வாய்ப்பளித்த
ஆண்டாகவே அமைந்தது.

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று இருந்துவிடாமல்,இவற்றைவிட சிறந்த செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்துடன் 2020 ஆம் ஆண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்
👍🙏

Nov 27, 2019

ISRO Voyage Experiences:









I went to ISRO with our five students to be the launch witness of PSLV C 47 on 27/11/2019.Really it's a great and unforgettable experience.Isro's hospitality was meritorious.

The two launch pads of Sriharikota are invisible if we see from the launch view gallery.So every moment was tense.

Space Theme Park:


A Space Theme Park is being realized at SDSC SHAR to enable the citizens of this nation to witness the launches taking place from the space port of India.It includes,

1.Rocket Garden:

All the 1:1 ratio of beautiful ISRO launch vehicles Sounding Rocket, SLV, ASLV,PSLV, GSLV, MK-3 will be realised with a provision to go inside.Lawns will be developed along with photo points fountain will be realised at the middle of the rocket garden.

2. Launch View Gallery:

The Space Port of India,naturally attracts the visitors to witness the launch activities and cheer for the pride of our Nation.At present, there are no appropriate facilities  for  accommodating more number of visitors to view the launch at Sriharikota.This would allow thousands of viewers to witness the launch.

3.Space Museum:

Space Museum provides a telltale account of the Indian Space Programme from its infancy.The story of the Indian Space Programme is unfurled in six sections,comprising of history,education,technology, applications, global and the future.

Nearest Railway Station : Sullurpeta,which is
18 Kms away from Sriharikota. Limited Public/Private Transport is available from Sullurpeta to Sriharikota.

The students had a lot of suspicions at the time the rocket was launched.They are not measurable.Each question was raised for response.From here our students received lot of  responses from what they saw and heard.

Currently our students learned the base language of the rocket.They will speak with it,soon.

Thanks to the ISRO that gave this opportunity.Isro's integration was great.Special thanks to the Andhra Transport Department (APSRTC) which provided excellent travel experience.

"The general truth is that a small fire can produce a large wildfire."


Municipal Middle School,
Mettupalayam,
Tiruppur north,
Tiruppur







Nov 24, 2019

VVM-Online Exam








Our students wrote the VVM Online Exam on 24/11/2019.Now certificates have been issued for that.

The exam were co-ordinated by central government institutions such as Vijnana Bharati,Vigyan Prasar and NCERT.

For our students who have always written exams through paper and pen,the online exam has been innovative.

Our students felt the novelty and they enjoyed the exam.

Nowadays all sectors are heading towards digital technology.Writing exams with paper and pen will be outdate in the future.

Our students have now successfully joined the digital exam system.

Thank  you VVM,NCERT,Ministry of Science and Technology,Vijnana  Bharati and Vigyan Prasar.













Municipal Middle School,

Mettupalayam,

Tiruppur North,


Tiruppur.


Nov 23, 2019

OSF's OSC-Telescope handling & Demonstration class.











Telescope handling & demonstration class was held on behalf of Open Space Foundation on the school premises and the diary book for the OSC was given to the students today.

OSF's Resource Person Mr.BHARAT taught our students the most effective telescopic handling techniques.

He taught with ease and effective.

Our students gained the ability to assemble and use telescopes.

This is their TELESCOPE from today

Now this is their domain.

Thank you OSF.









MUNICIPAL MIDDLE SCHOOL,
METTUPALAYAM,
TIRUPPUR NORTH,
TIRUPPUR
.



Nov 17, 2019

வணக்கம் - சிறு விளக்கம்











காலை வணக்கம்,மதிய வணக்கம்,மாலை வணக்கம் என்று கூறுவது சரியானதா?


இறைவனை மட்டுமே வணங்குதலும், மனிதர்களை வாழ்த்துதலுமே தமிழர் மரபு.சேர மன்னன் குடும்பத்துடன் கானகம் சென்ற போது 'வாழ்க எம்கோ' என மக்கள் வாழ்த்தினர்.அவ்வாறே 'வாழ்க நீ எம்மான்' என அரசர்களைப் புலவர்கள் வாழ்த்துதலே தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது.

சமஸ்கிருத மொழிக்கலப்பால் பிற்காலத்தில் வணக்கம் மனிதர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது.சமஸ்கிருதத்தில் அவர்கள் 'நமஸ்காரம்' என்று கூறியதை நாம் வணக்கம்
என தவறாக மொழிமாற்றம் செய்து,
மனிதர்களையும் வணங்க ஆரம்பித்தோம்.
மனித வணக்கம் என்பது தமிழர் பண்பாடாக இல்லாவிடினும்,தற்போது இலக்கணப்படி
வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் காலை வணக்கம்,மதிய வணக்கம்,மாலை வணக்கம் என்று கூறுவது சரியானதா?

இவை ஆங்கிலத்தினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மொழிப்பெயர்க்காமல்,அப்படியே
மொழிப்பெயர்ப்பதினால் ஏற்பட்ட தவறான சொல் வழக்குகள்.

இது போன்றே பல மொழிப்பெயர்ப்புகள் பொருந்தாமலே இருக்கும்.உதாரணமாக ஆற்று நீரில் என்ற சொற்றொடரில் நீர் என்னும் சொல்லே தேவையற்றது.ஆறு என்றாலே நீர்தான்.

மலையின் மேல் என்பதில் மலை என்றாலே மேல்தான்.மலையில் என்பதே சரியானது!

Water Falls என்பதை அப்படியே மொழிப்பெயர்த்து நீர்வீழ்ச்சி என்கிறோம்.நீருக்கு ஏது வீழ்ச்சி?
அருவி எனும் சொல்லே ஏற்புடையது.

King Cobra என்பதை வார்த்தை மாறாமல் பெயர்த்து இராஜநாகம் என்கிறோம்.
கருநாகம் எனும் சொல்லே தமிழுக்கு ஏற்றது.

இதையெல்லாம் விடப் பெரிய ஆச்சரியம் என்னவெனில் டீசல் என்பதைக் கல்நெய் என மொழிப்பெயர்ப்பது.டீசலைக் கண்டறிந்த ரூடால்ப் டீசலின் பெயரே அதற்கு வைக்கப்பட்டது!

கண்டுபிடிப்புகளை அந்தந்த மொழிப்பெயர்களுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது அவற்றின் பெயர்களை தமிழில் உருவாக்கலாமா? என்பது பெறும் விவாதத்திற்கு உரியது.

கண்டறிந்தோர் இட்ட பெயரை ஏற்பதே அந்தக் கண்டுபிடிப்பிற்கு நாம் செய்யும் மரியாதை என ஒரு தரப்பினரும்,அவற்றிற்கு தமிழில் பெயரிட்டால் தமிழின் சொற்களஞ்சியம் மேலும் பெருகும் என ஒரு தரப்பினரும் கூறுகின்றனர்.எது சரி என்பது உங்கள் சிந்தனைக்கு!

நாம் வணக்கத்திற்கு வருவோம்.Good morning என்பது உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும் என விருப்பம்(Wish) தெரிவித்தல்.தமிழில் வணக்கம் என்பது வணங்குதல்.இரண்டும் வேறுவேறு பொருள் தரக்கூடியன.

ஆனால் வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிப்பெயர்ப்பைப் பயன்படுத்தி,காலை வணக்கம்,மதிய வணக்கம்,மாலை வணக்கம் என்று கூறி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் பொருளில் Good morning,Good afternoon,Good night என்று கூறலாம்.

ஆனால் தமிழில் கூறும்போது,சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை என்பதால்,வணங்குதல் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.

காலை வணக்கம்,மதிய வணக்கம்,மாலை வணக்கம் எனக் கூறுவதனைத் தவிர்த்தல்,தமிழ் இலக்கண வழக்கப்படி சரியானதாகும்.

- சரவணன்

Oct 31, 2019

AirDroid Screen Mirroring:










AirDroid screen mirroring mode has been updated:


We follow the AirDroid screen cast method to view our mobile phone's screen on a laptop.It's a very easiest method for the teachers to do screen mirroring.

Now screen mirroring mode has been changed in the AirDroid's updated version.

Two other new methods have been introduced as an alternative to Airdroid screen mirroring by ip address.

AirDroid provides two ways to mirror your screen to computer easily.web and desktop client.Web-version is fast and easy,while the desktop version is powerful.With AirDroid Web,you just need to install only one app on your phone,by using a website you can use screen-mirroring functions.Here is a manual for you,

1)Web mode:

>Download AirDroid app on your Android device from Google Play.

>Login your AirDroid account.

>Visit AirDroid Web on your laptop.

>Login your same AirDroid account and choose your device.

>Tap “Screenshot” icon on laptop.

>Finished.Now you can see your mobile's screen on the laptop.

2)IP address mode:

>Download and install AirDroid app on your mobile.

>Open app.

>Open chrome and type AirDroid's Ip address on laptop.

192.168.43.1:8888

>Tap accept on mobile.

>Select screenshot on laptop.

>Tap start now in mobile.

>Now you can view your mobile's screen on  the laptop.

-Saravanan.

Oct 30, 2019

ஊழல் விழிப்புணர்வு வாரம் - நிகழ்வுகள்.









ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை ஒட்டி நமது பள்ளியின் மாணவர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நமது பள்ளியின் செயல்பாடுகளுக்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் பள்ளிக்கு நற்சான்று வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டின் மையக் கருத்தான "நேர்மை - ஒரு வாழ்வியல் முறை" எனும் தலைப்பில் ஓவியப்போட்டியும் நடைபெற்றது.

இலஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் மாபெரும் குற்றங்கள் எனும் புரிதல் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியைப் பெற்றோரை வீடுகளில் ஏற்க வைக்கவும்,
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான எதிர்காலத்தை உருவாக்கவும் மாணவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்!


நேர்மையான,தெளிவான சுயசிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எமது பெருங்கனவின் சிறு விதைகள்:

"நேர்மைக் கடை"விதை :




எமது வகுப்பில் "நேர்மைக் கடை" நடைமுறையில் உள்ளது. அதில் தொடர்ந்து மாணவருக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கிறோம்.பொருட்களின் விலை பட்டியலும் வைக்கப்படும்.

 மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்,மேலும் அவர்கள் விரும்பிய கட்டணத்தை அருகிலுள்ள சிறிய பெட்டியில் செலுத்தலாம்.

பொருட்கள் வாங்கப்பட்ட தொகையை விட ஒவ்வொரு முறையும் பெட்டியில் உள்ள தொகை அதிகமாகவே உள்ளது.இது தெரியாமல் தவறுதலாக நடைபெறுவதில்லை.
மாணவர்களின் நேர்மை மற்றும் பரந்த மனப்பான்மை காரணமாக இது நிகழ்கிறது.

இது குறித்து எனக்கு பெரிதும் மகிழ்வே.
 "இந்த உலகத்தைச் சொர்க்கமாக்குவதற்கான சிறந்த வழி நேர்மையே"


வாக்குகள் விற்பனைக்கு அல்ல விதை:




சமுதாயத் தீமைகளைக் கண்டு வெறுமனே குறைகூறிப் புலம்புவதை விட,அதனைச் சற்றேனும் மாற்றியமைக்க முயலுதல் சிறந்தது என்பர்.ஏனெனில் தனி மனிதன் தவிர்த்து சமுதாயம் என்று தனியாக ஒன்றுமில்லை.அதிலும் சமுதாயத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.

எமது ஆசிரியப் பணியில் யாம் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது,
"குறிப்பேடு ஏன் வாங்கவில்லை?"
என்ற எமது வினாவிற்கு
"பெற்றோரின் ஓட்டுக்கான பணம் கிடைத்தவுடன் குறிப்பேடு வாங்கி விடுகிறேன்" என்ற மாணவனின் பதில்.


இந்த பதில் எமக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.நிதர்சனம் அப்பட்டமாய் கண்முன் நின்றது.

சனநாயகத்தின் தோல்வியும்,இன்றைய மக்களின் செயல்பாடுகளால் அது கேலிக்கூத்தாக மாறி இருப்பதும் முகத்தில் அறைந்தது.

எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி மாணவனால் கூறப்பட்ட பதில்,பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட நஞ்சை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

இரு இரவுகள் உறக்கமின்றிக் கழிந்தன.வாக்கிற்கு பணம் பெறுதல் தவறு என்று உணராத இளைய தலைமுறையைக் கண்டு ஒரு ஆசிரியராகப் பெரும் குற்ற உணர்வு ஏற்பட்டது.


கேள்விகளில் இருந்து மட்டுமல்ல,சில நேரங்களில் பதில்களில் இருந்தும் கூட மாற்றங்கள் பிறக்குமல்லவா?


மாபெரும் விருட்சத்தின் விதை சிறியது அன்றோ?எமது மாணவரிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்!


மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல! பெருஞ்செயல்!

வெறுமனே சொற்களால் அறிவுரை கூறுவது எல்லா நேரங்களிலும் பயனுடையதாய் இராது.

செயல்பாடுகள் வழியே கற்றுக் கொள்ளுதலே  சிலையில் எழுத்தாம்.எம் மாணவரைச் செயல்படவைக்க முடிவு செய்தோம்.

வாக்கு விற்பனையின் தீமைகள் குறித்து படக்காட்சிகள்,உரைகள் உள்ளிட்டவை மூலம் மாணவர்களுக்கு தெளிவை அளித்த பின்,ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்களைத் தனித்தனியாக "வாழ்த்து அட்டைகளைத்" தயாரிக்கச் செய்தோம்.

அவற்றில் தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு,
வாக்களிப்பதன் அவசியம் குறித்த படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மாணவர்களால் எழுதப்பட்டன.

உச்சமாக "வாக்கு விற்பனைக்கு அல்ல" எனும் வாசகம் வாழ்த்து அட்டைகளில்  பெரிதுபடுத்தப்பட்டு மாணவர்களால் எழுதப்பட்டது.


அவற்றை பெற்றோரிடம் அளித்து "வாக்களிக்கப் பணம் பெறமாட்டோம்" எனும் உறுதி மொழியைப் பெறச் செய்தோம்.

வாழ்த்து அட்டைகளை அளித்தவுடன் பெற்றோரின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளை அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பில் பகிர்ந்து கொண்டனர்.

"கொடுப்பதினால் பெறுகிறோம்" என்பதில் தொடங்கி "இல்லாததால் பெறுகிறோம்"வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

விமர்சனங்களைத் தாண்டி,இந்த விஷயத்தில் தாங்கள் செய்வது தவறு எனும் உணர்வு முதன் முறையாக மாணவர்களால் பெற்றோருக்கு ஊட்டப்பட்டது.

பிறர் அறிவுரையைக் கேட்டுப் பொங்கும் பெற்றோர் கூட,மாணவரின் அன்புரையில் இருந்த நியாயத்தை உணர்ந்தனர்.தம் குழந்தைகள் குறித்த பெருமித உணர்வு கொண்டனர்.


அதன் பயனாய் வாக்கிற்குப் பணம் அளிக்க வீடுகளுக்கு வந்தோரைப் பெற்றோரும்,பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களும்  திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடங்கின.வெற்றிகரமாகத் தொடர்ந்தன.பெற்றோர் அனைவரும் வாக்களித்தனர்.பணம் பெறாமல்!


இச்செயல்பாடு குறித்து செய்தித்தாள்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.
திருப்பூர் மாநகரின் மாற்றம் தரும் ஒரு நிகழ்வாய் மாணவர்களின் இச்செயல்திட்டம் மாறியது.


அன்பு,கருணை,இரக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களின் வேராய் இருப்பது நேர்மை. ஆனால் நேர்மை குணம் உடையோரை இந்தச் சமூகம் சற்று ஆச்சரியத்துடனே உற்று நோக்குகிறது!எதிர்கால இளைய தலைமுறை நேர்மையான மனிதர்களைக் கொண்டிருப்பின் இந்தப் பூமியே சொர்க்கப் பூங்காவாக மாறிவிடும்.

இன்றைய இளைய தலைமுறைக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியருக்கு மேம்பட்ட திறன்கள் தேவை.ஒரு ஆசிரியர் தனக்குத் தானே நேர்மையை வளர்த்துக் கொள்வதும்,அது மாணவரிடம் வளரத் தேவையான செயல்பாடுகளைத் திட்டமிட்டு வடிவமைத்தலும் இன்றைய சூழலில் பெருங்கடமையாகிறது.


இனி தேர்தல்கள் வரும்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்த தீர்மானித்துள்ளோம்.

எமது வகுப்பறை சார்ந்த பிந்தைய நிகழ்வுகளுக்கு இந்நிகழ்வு ஒரு துண்டுகோலாய் அமைந்தது.

நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதாய் மாணவனின் பதிலும்,அதனை ஒட்டி நிகழ்த்தப்பட்ட செயலும் அமைந்தன என்றால் அது மிகையில்லை.


"கொடுத்து மகிழுதல்" விதை :



பள்ளியில் 'கொடுத்தலில்  மகிழ்ச்சி' நிகழ்வைத் தொடர்ந்து  நடத்துகிறோம்.

எங்கள் மாணவர்கள் பிற மற்றவர்களுக்குக் கொடுத்து அதை ரசிப்பர்,பெரும் மகிழ்வு அடைவர்!

"நமக்கு பெறுவதன் மூலம் ஒரு வாழ்க்கை கிடைக்கிறது.ஆனால் நாம் கொடுப்பதன் மூலம் ஒரு வாழ்க்கையை
உருவாக்குகிறோம் "

"நம்பிக்கையுடன் தொடர்ந்து விதைப்போம்.
முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்!"

Oct 23, 2019

NMMS- Registration





NMMS registration method:

Step1:

Registration.

https://apply1.tndge.org

School registration>

Enter emis user name and password>


Check>

Enter all details>

Register.

Wait 1 day for login permission.

Step 2:

http://www.dge.tn.gov.in


Click here to access Online Portal for School and Educational Offices.>


NMMS EXAM DEC 2019-2020 DATA UPLOADING (SCHOOL LEVEL)

Enter emis user name and password>

Sign in>

Dashboard>

Pull student data (emis portal)

Pull data>

Other exam

Apply exam>

NMMS exam>

Apply exam

Select student and apply NMMS>

Step3:

Make payment.

Step 4:

How to Generate the report for applied students?

Dashboard>

Report section>

Multiple report>

Fill multiple report details>

Get candidate detail report.

-Saravanan.

Oct 19, 2019

OSC Launch







OSC (Open science centre) was officially launched today at our school on behalf of the open space foundation.We also got recognition for our activities of our school from OSF.The CEO of OSF Mr.Surender presented this in person.He initiated the discussion class with our students today.

It's a first and best event of the OSC.Our students are so refreshed and confident by today’s event.They look forward to Osc's events with great anticipation.

The best start is half the win.Towards great successes,we will continue to travel together.

Thanks to the Open Space Foundation for everything.





Oct 7, 2019

Osf's Osc -Changelooms field visit.





Two organisers from "Changelooms -Delhi "came to our school today for field visit.OSF Organized this event.It's a field visit by the Changelooms organization to release funds for setting up the Open Science Centre on behalf of the OSF at our school.

At the event OSF's resource person clearly explained about telescope.Students learned about telescope through the activity based learning method.Basic physics was first explained to the students.

Then the  students expressed their ambition.
Guidelines for achieving student's ambitions were given.Then the art of origami were introduced to the students.

Finally,the Changelooms Coordinators discussed with our students.With the co-operation of the students,today became a special day.

The field visit appointment of the changelooms was only available today.Today is the holiday.But all the students I called on the phone came to the event.

It shows the students' interest in learn innovation.For that I have to think more innovative,different and smart.Let's do more and more innovatives for our students.


We hope we have done better.OSF has submitted an excellent action plan.We hope to get funding soon and set up osc in our school.

Thank you so much for the OSF and Changelooms organizations.










Oct 5, 2019