ஆசிரியர்களின் பேரிலக்கணமாம் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும்
இந்நன்னாளில் தங்களின் அன்பை விழைகின்றேன்.
வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காது ஒழுக்கம், பண்பு,
ஆன்மிகம்,பொது அறிவு, ஆற்றல் மேம்பாடு, திறமை வளர்த்தல், தன்னம்பிக்கை, வாழ்வியல்
என பன்முகத் திறன்களை பகுத்துக்கூறி சிறந்த குடிமகனாக்கும் உன்னதமானதோர்
தெய்வீகப் பணியே ஆசிரியப்பணியாகும்.
மாணவ சமூகத்தின் மத்தியில் குறிக்கோள், இலட்சியம் எதிர்காலம்
இவற்றை நன்கு பதிய வைத்து அவர்களின் சீரிய வழிகாட்டியே ஆசான். ஒருதேசத்தின் எதிர்காலத்தை தாங்கவிருக்கும் துாண்களுக்கு வைரம் பாய்ச்சுவரே நீர்.மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக
விளங்குபவரே ஆசிரியர்.
மனித சமுதாயச் சிற்பிகளே.தங்களை இந்த நல்லதோர் தருணத்தில்
நினைவு கூர்ந்து வணங்கி வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment