Sep 26, 2018

ஆதார் - உச்சநீதிமன்றத் தீர்ப்பு

ஆதார் இனிமேல் எங்கு தேவை ?
எங்கு தேவையில்லை?

-உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

1)எந்த ஒரு தனியார் நிறுவனமும்
ஆதார் விவரங்களைக்
கேட்கக்கூடாது.

2)தனியார் நிறுவனங்களுக்கு
தகவல்களை தர அனுமதி தரும் ஆதார்
சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

3)மொபைல் போன் நிறுவனங்களுக்கு
ஆதார் எண் தர வேண்டிய
அவசியமில்லை.

4)வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.

5)வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண்
வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

6)பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு
ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.

7)வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.

8)பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.

9)அரசு மானியம்,உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார்
எண்ணைக் காட்டி அதனைத் தடுக்க முடியாது.

10)அரசு சேவைகளைப் பெற ஆதார் அவசியம். தேச பாதுகாப்பிற்கு மட்டுமே ஆதாரைப் பயன்படுத்த வேண்டும். தனிநபரின் தகவல்களை பாதுகாக்க
வேண்டியது அரசின் கடமை.

No comments:

Post a Comment