புத்தகம் வாசிக்க என தனியாக நேரம் ஒதுக்கவில்லை.எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புத்தக வாசிப்பு தான்!
சிறந்த ஓய்வு என்பது ஒரு வேலைக்கு மாற்றாக வேறு வேலை செய்வது என்பர்.அதனையொற்றி ஒரு புத்தகம் சலிப்பூட்டும் போது வேறு புத்தகம் வாசிப்பது புத்தக வாசிப்பை மேலும் சுவாரஸ்யமூட்டுவதாய் மாற்றுகிறது!
நூலகங்கள்,வாடகை நூல் நிலையங்கள், புத்தகக் கண்காட்சிகள்,புத்தகக் கடைகள் இவையெல்லாம் சொர்க்கத்தின் திறவுகோல்களாகவே காட்சி தருகின்றன.
மாலைநேர மழைக்காலம்,மலை இரயிலின் சன்னலோர இருக்கை,ஒருகையில் புத்தகம்,மறுகையில் தேநீர் கோப்பை இதைவிட சொர்க்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை!
நீர்வழிப் படூஉம் புனைபோல,நூல் வழிப்படுவதாகவே வாழ்க்கை அமைந்துள்ளது.ஆனாலும் எங்கள் வீட்டினைக் கூட்டிப்பெருக்கும் போதெல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் புத்தகங்களை சலிப்பின்றி எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டே இருக்கும் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு கோடானு கோடி நன்றி!
2023 இல் -படித்ததில் பிடித்த 10 புத்தகங்கள் :
1)துயில்-எஸ்.ரா
2)The Da Vinci Code-Dan Brown
3)திராவிட மாயை–சுப்பு
4)The Greek Myths- Graves
5)குரு-பாலகுமாரன்
6)வேல ராமமூர்த்தி கதைகள்
7)Ulysses-Joyce
8)ஆ-சுஜாதா
9)அறம்-ஜெமோ
10)The Star-HG Wells
-அகன் சரவணன்
No comments:
Post a Comment